சென்னை: சார்பதிவாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை ஓய்வு பெறும் 3 மாதங்களுக்குள் முன்னர் முடிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. சில நேரங்களில் சார்பதிவாளர்கள் சொத்தின் மதிப்பை குறைத்து கட்டணம் நிர்ணயம் செய்வதாக தெரிகிறது. இதனால், அரசுக்கு மறைமுக இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், சார்பதிவாளர்கள் பலர் மீதான விசாரணை ஓய்வு பெறும் வரை நடக்கிறது. இதனால் அரசுக்கு நேரடி இழப்பு தொகையை சார்பதிவாளர்களிடம் வசூலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதே போன்று தற்போது வரை 110 சார்பதிவாளர்கள் மீதான விசாரணை முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கும் சுற்றறிக்ைக ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 2020-2021ம் நிதியாண்டில் வயது முதிர்வினால் ஓய்வு பெற உள்ள சார்பதிவாளர்கள் தொடர்பாக ஓழுங்கு நடவடிக்கை நிலுவை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய இழப்பு ஏதும் இருப்பின் அவ்வினங்களை உடன் தீர்வு செய்திட சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கவும் தெரிவிக்கப்படுகிறது.