சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளுக்கு மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பதவியில் (2017-2019ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 49 பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்வை கடந்த ஜூன் 23ம் தேதி நடத்தியது. இதில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக 102 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.