மும்பை: பஞ்சாப் மற்றும் மராட்டிய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. பி.எம்.சி வங்கியில் ரூ.4,355 கோடி அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமானதை அடுத்து வங்கி நடவடிக்கை முடக்கப்பட்டது. வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க விதித்திருந்த கட்டுப்பாட்டை படிப்படியாக ரிசர்வ் வங்கி தளர்த்தி வருகிறது.