சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் ரூ.1,600 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பினாமிகளின் பேரில் சொத்து வாங்கியிருந்ததாக சசிகலா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியின் போது அதிகாரத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உறவினர்கள், பணியாளர்கள் பேரில் சொத்துக்கள் வாங்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.