சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் சாந்த குமாரி உள்ளிட்ட 10 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிஐ வெளியிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை தொடங்கியது. இதுவரை 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கின் இடைக்கால குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு விசாரணை அறிக்கையை 3ம் நபருக்கு தர முடியாது: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டம்
- பொல்லாச்சி பாலியல் துன்புறுத்தல் சோதனை அறிக்கை 3 ஆக முடியாது: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ திட்டம்
- பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல்