திருவொற்றியூர்: மாதவரத்தில் பைக் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், சத்தியவேடு, பொம்மாஞ்சி குண்டா கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (26). அதே பகுதியை சேர்ந்தவர் வேலு (24). இருவரும், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தங்களது உறவினரை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் பைக்கில் வந்தனர். மருத்துவமனையில் உறவினரை பார்த்துவிட்டு நேற்று காலை மீண்டும் ஆந்திராவிற்கு பைக்கில் புறப்பட்டனர். மாதவரம் ஜிஎஸ்டி சாலையில் பொன்னியம்மன்மேடு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி இவர்கள் மீது மோதியது.