சென்னை: எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும். மேலும் நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 15, 22ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை தாம்பரத்திற்கு 2.15 மணிக்கு வந்தடையும்.