சென்னை : உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில் 5 மாநகராட்சிகளில் நிலைக்குழுக்களை அமைத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன்படி டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு எதிரொலி 5 மாநகராட்சிகளில் நிலைக்குழு அமைப்பு : நகராட்சி நிர்வாக துறை உத்தரவு
- உள்ளூர் தேர்தல் அமைப்பு எதிரொலி நிலைக்குழு
- துறை உத்தரவு. 5 நகராட்சிகள்
- 5 நகராட்சிகள்: நகராட்சி நிர்வாகம்
- உள்ளூர் தேர்தல்கள் எதிரொலி நிலைக்குழுவை ஏற்பாடு செய்கின்றன