தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியரை மர்மநபர் தீவைத்து எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்துள்ளப்பூர்மெட் தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த மர்மநபர்கள் வட்டாட்சியர் விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மர்ம நபர் தீ வைத்து எரித்ததில் வட்டாட்சியர் விஜயாரெட்டி உயிரிழந்தார்.