சென்னை: மனநிலை பாதிக்கப்பட்ட மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தந்தையும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சென்னை ஆழ்வார்பேட்டை ஆழ்வார் தெருவை உள்ள திருவேணி அடுக்குமாடி குடியருப்பை சேர்ந்தவர் விஸ்வநாதன்(82). சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வெங்கட்ராம்(44) என்ற மகன் இருந்தார். இதற்கிடையே விஸ்வநாதன் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு விஸ்வநாதன் தனது மகனை தனியாக பார்த்து வந்தார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் விஸ்வநாதன் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் கடந்த வியாழக்கிழமை இரவு விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது, படுக்கை அறையில் அழுகிய நிலையில் விஸ்வநாதன் மகன் வெங்கட்ராம் இறந்து கிடந்தார். அதன் அருகே விஸ்வநாதன் மயக்க நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.