சென்னை: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தார். சென்னை வந்த குடியரசு துணை தலைவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோரும் வரவேற்றனர். இதனையடுத்து சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; முதலாம் நூற்றாண்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம் கடல்சார் கட்டமைப்பில் நாம் சிறந்து விளங்கியதற்கான சான்று.