துணி வியாபாரியிடம் ரூ17.86 லட்சம் மோசடி: பெண் சிறையிலடைப்பு

தண்டையார்பேட்டை: விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மைக்கேல் ரிச் (45). ஆடை ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கும், புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த சங்கீதா (39) என்பவருக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மைக்கேலிடம் இருந்து ரூ17 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான துணியை சங்கீதா வாங்கியுள்ளார்.

ஆனால், அதற்கான பணத்தை கொடுக்காமல், ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து மைக்கேல் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கீதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.

Related Stories: