காவேரிப்பாக்கம்: வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(65), விவசாயி. இவருக்கு அரங்கராஜன்(44), அசோக் குமார்(39) என 2 மகன்களும், ராஜலட்சுமி(40) என்ற மகளும் உள்ளனர். ராஜலட்சுமி சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயர்பாடி கிராமத்திலிருந்து உத்திரம்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் பழைய வீட்டை வாங்கி 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாடி கான்கிரீட் வீடு கட்டினார். கீழ் தளத்தில் உரக்கிடங்கும், முதல் தளத்தில் ஒரு வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ்(27) என்பவரும் மற்றொரு பகுதியில் திருச்சியை சேர்ந்தவரும், வாடகைக்கு தங்கி உள்ளனர்.