சென்னை: ஆட்சியை பற்றிய குறைகளை தெரிவிக்க எதிர்கட்சி தலைவருக்கு முழு உரிமை உண்டு என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் நிகழ்ச்சி துறைமுகம் தொகுதி ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இரா.மனோகர் தலைமை வகித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இந்திரா காந்தியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.