சென்னை: அஞ்சல் துறையின் இணையதள வணிகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இணையதள வணிக சேவையில் இதுவரை 23 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, அஞ்சல் இணையதள வணிகத்தை மேம்படுத்தும் நோக்குடன் விற்பனை பொருட்களின் எண்ணிக்கையை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள எங்களது விற்பனை முகவர்கள் நேரடியாக விற்பனைதாரர்கள் மற்றும் சுயஉதவிக்குழுவினர் இருக்கும் இடத்திற்கு தேடிச்சென்று அவர்களிடம் பொருட்களை கொள்முதல் செய்துகொள்வார்கள்.