சென்னை: ஆழ்கடலுக்கு சென்று மாயமானதாக கூறப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக மீன்வளத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 4ம் தேதி கிட்டத்தட்ட சுமார் 850 படகுகளில் பல்வேறு மாநிலங்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் சென்றனர். கடந்த 6 தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட புயல் எச்சரிக்கைக்கு பின்பு கிட்டத்தட்ட 8 படகுகள் போக மீதமுள்ள அனைத்து படகுகளும், அதிலுள்ள மீனவர்களும் பாதுகாப்பாக ஒவ்வொரு பகுதிகளாக கரையேறியுள்ளனர். ஆனால் இந்த 8 படகுகளில் உள்ள மீனவர்களின் நிலை என்ன? படகுகளுடைய நிலை என்ன? என்பது புரியாத புதிராக இருந்து வந்த நிலையில், அதிலுள்ள ஒரு படகு மீனவர்கள் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக நேற்றிரவு தகவல் கிடைத்தது.