தாம்பரம்: குரோம்பேட்டை நியூ காலனி 12வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (23). இவர் நேற்று மாலை சுமார் 5:30 மணி அளவில் குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தின் அருகே உள்ள 100 அடி செல்போன் டவரின் மீது கருப்பு கொடியுடன் ஏறி, சுஜித்தை அரசு சிரியாக மீட்கவில்லை. மீண்டும் இதுபோன்ற ஒரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது எனவும், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் அவர்களை காப்பாற்ற உரிய கருவியை அரசு தயாரிக்க வேண்டும். மேலும், திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.