சாம்ராஜ்நகர்: காட்டு பன்றி இறைச்சியை பைக்கில் கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா பிலிகிரிரங்கநாத கோயில் அருகே இருவர் காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை பைக்கில் எடுத்து செல்வதாக வனத்துறை அதிகாரி மகாதேவைய்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த அதிகாரிகள் வனபகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது இவர்களிடம் 10 கிலோ காட்டு பன்றி இறைச்சி இருப்பது தெரிய வந்தது.