திருச்சி: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் சீரமைத்து ஓராண்டுக்கூட முடியாத நிலையில் திருச்சி காவிரி பாலம் இரண்டாக பிளந்தது.
திருச்சியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக சத்திரம் பஸ் நிலையம்-ஸ்ரீரங்கம் பகுதியை இணைக்கும் காவிரி பாலம் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தையும், ஸ்ரீரங்கத்தையும் இரண்டாக பிரித்து ஓடும் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள இப்பாலம் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இப்பாலத்தின் பக்கவாட்டில் கைப்பிடி சுவர் இடைவெளி வழியே காவிரி ஆற்றின் அழகை ரசித்தப்படியே பஸ் பயணம், வாகனப் பயணம் செய்வது அலாதியான இன்பம் தரும். ஆனால் இப்பாலம் சீரமைப்பதாக கூறி கைப்பிடி சுவர்கள் இடிக்கப்பட்டு, காவிரி ஆற்றின் அழகை ரசிக்க முடியாதவாறு முழுமையாக அடைத்து கட்டப்பட்டது. இது திருச்சி மக்களின் கடும் கண்டனத்துக்குள்ளானது. இதையடுத்து, மீண்டும் கைப்பிடி சுவரில் இடைவெளிவிட்டு கட்டப்பட்டது. பல மாதங்களாக இப்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவஸ்த்தையடைந்தனர்.கடமைக்காக சீரமைப்பு இரண்டாக பிளந்த காவிரி பாலம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்
- கடமைக்கான காவிரி பாலம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் கடமை
- பிளவு காவிரி பாலம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்