சென்னை: பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை கிராமம், தெருவாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்று குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்கட்டமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கிராமம், தெருவாரியாக சென்று தீவிரமாக ஆழ்துளை கிணறுகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.