சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தற்போது 55 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், நீதிபதி கே.கே.சசிதரன் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்ற கொலீஜியம் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு பட்டியலை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியது.