சென்னை: தீயணைப்புத்துறை டிஜிபியாக உள்ள காந்திராஜன் இன்று ஓய்வு பெறுகிறார். தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக காந்திராஜன் பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. காந்திராஜன் திருவள்ளூர் மாவட்டத்தில் 3-10-1959ல் பிறந்தார். பட்டம், பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் இந்திய குடிமைபணி தேர்வில் தமிழக கேடரில் கடந்த 1985ம் ஆண்டு தேர்வானார். ஐபிஎஸ் பயிற்சி முடித்த அவர், கூடுதல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் தருமபுரி, ஈரோடு, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை மாநகர காவல் துறையில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராகவும் சிறப்பாக பணியாற்றியனர்.