சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் என்ற புதிய திட்டத்தை உலக வங்கி உதவியுடன் செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில், 3,994 ஊராட்சிகளில் செயல்பட உள்ளது. இத்திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரையும் தொழில் முனைவோராக்க துணை புரியும். தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 525 நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி ஆணைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடிநீர் வாரியம், மாநகராட்சி சார்பில் திட்டப்பணிகள் திறப்பு, அடிக்கல் நாட்டு விழா : முதல்வர் பங்கேற்பு
- நீர் வாரியம்
- குடிநீர் வாரியம்
- மாநகராட்சி திட்டம்
- மாநகராட்சி திறப்பு திட்டங்கள், அறக்கட்டளை நாள்
- முதல்வர்