சென்னை: திருவான்மியூர் நரிக்குறவர் காலனி மற்றும் மாதவரம் சாஸ்திரி நகர் திட்டப் பகுதிகளுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நவம்பர் 12, 13ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளை சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகளாக மாற்றி அங்கு வசித்து வந்தவர்களுக்கே, அவர்களின் மனைகளுக்கு வாரியத்தால் ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டிருந்தது. இத்திட்டப்பகுதியின் நிலங்களை வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக உயர் அலுவலர்கள் கொண்ட செயலாக்கக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழு எடுத்த முடிவுகளின்படி தமிழகம் முழுவதும் உள்ள 17 திட்டப்பகுதிகளின் நிலங்கள் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் திருவான்மியூர், மாதவரம் பகுதிகளுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம்: நவ.12, 13ம் தேதி நடக்கிறது
- சிறப்பு முகாம்
- Thrivanmiyur
- மாதவரம்
- குடிசை பரிமாற்ற வாரியம்
- தமிழ்நாடு
- தமிழ்நாடு குடிசை பரிமாற்ற வாரியம்