ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் சுவற்றில் அரசியல் கட்சியினர் எழுதிய விளம்பரத்தில் மர்ம நபர்கள் பெயின்ட் ஊற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. அந்த சுவற்றுக்கு போலீசார் வெள்ளையடித்து பிரச்னைக்கு தீர்வு கண்டனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பேரூர் கிராமத்தில் சாலை ஓரம் தனியாருக்கு சொந்தமான சுவற்றில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் விளம்பரம் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை அந்த சுவர் விளம்பரங்களில் மர்மநபர்கள் யாரோ சாணம் அடித்தும், பெயிண்ட் ஊற்றியும் அவமரியாதை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.