திருவள்ளூரில் 3 நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன : ஆட்சியர் மகேஸ்வரி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். மேலும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் பற்றி 9444317862 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தரலாம் என்றும் ஆட்சியர் மகேஸ்வரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க எழுத்துப் பூர்வமாக அனுமதி பெற வேண்டும் என்றும் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். 

Related Stories: