சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 6 லட்சத்து 70 ஆயிரத்து 630 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதனால், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை முடிந்தநிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். எனவே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகள் வசதிக்காகவும் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டது.