சென்னை: தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு, பணியிலிருந்த காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கடந்த 26ம் தேதி இரவு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து முனையம், மெரினா காந்திசிலை, சென்ட்ரல் ரயில் நிலையம், தி.நகர் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு பணியிலிருந்த காவலர்களுக்கு இனிப்புகளை வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.