சென்னை: வேலூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமனம் செய்வது குறித்து அறிக்கை தருமாறு சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்ற 2 புதிய மாவட்டங்களையும், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டும் புதிய மாவட்டத்தையும் அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது.