சிவகங்கை: சிவகங்கை அருகே எந்தவித அனுமதியின்றி மருதுபாண்டியர் சிலையை நிறுவ முயன்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். சிவகங்கை அருகே நேற்று காளையார் கோவிலில் மருதுபாண்டியரின் 218வது குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க மதுரையில் இருந்து வந்த சிலர் சிவகங்கை தெப்பக்குளம் அருகே மருது சகோதரர்கள் சிலைகளை நிறுவ ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து டி.எஸ்.பி., முகமது கபூர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எந்தவித அனுமதியும் இன்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை நிறுத்துமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். எஸ்.பி., ரோஹித்நாதன் தலைமையில் வந்த போலீசார் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அங்குள்ளவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.