திருப்பத்தூரில் தனத்தையும், லட்சுமியையும் வைத்துக் கொண்ட கலால் பெண் இன்ஸ்பெக்டரின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம். திருப்பத்தூர் வட்டாரம், புதூர்நாடு வட்டாரத்தில் உள்ள தாபா ஓட்டல்கள், சாராய கடைகளையும், சாராயம் காய்ச்சுபவர்களையும் பட்டியலை வைத்துக் கொண்டு தீபாவளி வசூலில் கலக்கி வருகிறாராம். இதற்காக ஒரு டுபாக்கூர் நிருபரையும் துணைக்கு வைத்துக் கொண்டு செல்கிறாராம். வசூல் செய்வதை தான் ஒருவரே எடுத்துக் கொள்கிறாராம்.