சென்னை: நாடு முழுவதும் 2020-2021ம் நிதியாண்டில் 75 புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்தந்த மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில், தமிழக அரசு சார்பில் நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நிலையில் மேலும், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மற்றும் நாகை மாவட்டங்களில் 3 மருத்துவகல்லூரி உடன் கூடிய மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா 150 சீட்டுகள் வீதம் 450 சீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கல்லூரிகளுக்கான இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
மத்திய அரசு 6 கல்லூரிகளுக்கு அனுமதி 1089 கோடியில் 3 மருத்துவ கல்லூரிகள் அமையும் இடங்கள் தேர்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல்
- மருத்துவ கல்லூரிகள்
- மத்திய அரசு சேர்க்கை
- மத்திய மருத்துவ சேர்க்கை குறித்து தமிழக அரசு அறிக்கை
- கல்லூரிகள்
- தமிழ்நாடு