சென்னை: தேசிய தண்ணீர் விருதுக்கு விண்ணப்பிக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி சுற்றிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:தண்ணீர் நம் வாழ்வுக்காக முக்கிய ஆதாரங்களின் ஒன்று. வேளாண்துறையில் விளைச்சல் அதிகரிப்பின் தேவை, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கலால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் பருவகாலங்களில் போதுமான மழை பெய்யவில்லை. இந்நிலையில் தண்ணீர் வளத்தை காப்பதற்கு நாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், தண்ணீர் வளங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே தேசிய நீர்வளத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சிறந்த படைப்புகளுக்காக கல்லூரி மாணவர்களுக்கு தேசிய தண்ணீர் விருது: துணைவேந்தர், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை
- கல்லூரி அதிபர்
- துணை வேந்தர்
- சிறந்த படைப்புகளுக்கான தேசிய படைப்புகளுக்கான கல்லூரி மாணவர்கள்
- கல்லூரி அதிபர்கள்