தறிகெட்டு ஓடிய லாரி ஓட்டலுக்குள் புகுந்தது

புழல்:புழல் அண்ணா நினைவு நகரில் சாலையின் இருபுறமும் வீடுகள், ஓட்டல்கள், கடைகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் கதிர்வேடு பகுதியில் இருந்து புழல் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த மினி லாரி  திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகேட்டு ஓடி, அங்கிருந்த அன்பு ராஜா (46) என்பருக்கு சொந்தமான ஓட்டலில் புகுந்தது. இதில், ஓட்டல் கட்டிடம் சேதமானது. அருகில் உள்ள ஜஸ்டின் என்பவர் வீடும் சேதமடைந்தது.  அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரியை அகற்றினர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: