இஎஸ்ஐசி சிறப்பு குறைதீர் முகாம்

சென்னை: இ.எஸ்.ஐ.சி துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை:  தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், தொழிலாளிகள், தொழில் முனைவோர் மற்றும் பயனாளிகளுக்காக குறைதீர்க்கும் நாளை கடைபிடித்து வருகிறது. விழிப்புணர்வு  வாரத்தையொட்டி சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இ.எஸ்.ஐ.சி கார்ப்பரேசன், மண்டல அலுவலகம், ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம் என்ற இடத்தில் நடக்கிறது. பயனாளிகள் இந்த  வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம்.

Related Stories: