மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர், தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.