தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களுக்கு அளவில்லா தொலைபேசி அழைப்பு சேவை : பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

சென்னை: பி.எஸ்.என்.எல் வெளியிட்ட அறிவிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 27 மற்றும் 28ம் தேதிகளில் அளவில்லா தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. இதன்மூலம் 24 மணி நேரமும் தடையில்லாத சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். லேண்ட் லைன், செல்போன் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இந்த கட்டணமில்லாத மற்றும் அளவில்லா அழைப்பு சேவை மூலம் தங்களின் உறவினர்கள், நண்பர்களுடன் வாடிக்கையாளர்கள் தீபாவளி பண்டிகையை தடையின்றி கொண்டாட முடியும். இதேபோல், நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு வரும் 2020 மார்ச் மாதத்திற்குள் பாரத் பைபர் சேவையை விரிவுபடுத்த பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது.

Related Stories: