பெரம்பூர்: சின்ன கொடுங்கையூரில் இருந்த வெள்ளை காகத்தை பார்க்க மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.சென்னை சின்ன கொடுங்கையூர் சீதாராமன் நகர் 7வது தெருவில் நேற்று காலை ஏராளமான காகங்கள் இருந்தன. இதன் நடுவே வெள்ளை நிறத்தில் ஒரு பறவை இருந்ததால் ஆச்சரியம் அடைந்த அப்பகுதி மக்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது அது வெள்ளை நிற காகம் என்பது தெரியவந்தது.