வேளச்சேரி: சென்னை மாநகராட்சி 180 வார்டுக்குட்பட்ட தந்தை பெரியார் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது.இந்த பகுதியில் பாதாள சாக்கடையில் கடந்த 20 நாட்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டது. அதனால் பாதாள சாக்கடை தொட்டி மூடிகள் வெளியே கழிவுநீர் வெளியேறி தெருக்களில் குளம்போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக பாரதிநகர் பகுதிக்குட்பட்ட யமுனா தெரு மற்றும் தந்தை பெரியார் நகருக்கு உட்பட்ட அண்ணா தெரு ஆகிய தெருக்களில் கழிவுநீர் குளம்போல் தேங்குகிறது. இந்த இரண்டு தெருக்களும் இந்த பகுதியில் உள்ளவர்கள் மெயின் சாலைக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த இரு சாலைகள் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலைகளில் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் தொடர்ந்து தேங்கி வருகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த கழிவுநீர் மாதக்கணக்கில் சாலையில் தேங்குவதால் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் வேலைக்கு செல்லும்போதும், வெளியிடங்களுக்கு செல்லும்போதும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போதும் இந்த கழிவுநீரில் நடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் கால்களில் சேற்றுப்புண் ஏற்படுவது, மேலும் தோல் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகிறது.
தரமணி தந்தை பெரியார் நகரில் வீடுகள் அருகே கழிவுநீர் தேக்கம்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி
- தந்தை சாக்கடைகள்
- தரமணி
- வீடுகள்
- பெரியார்
- துர்நாற்றம். Dharammani
- பெரியார் கழிவுநீர் அடுக்கி வைக்கும் வீடுகள்