புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவு பாஜவின் தார்மீக தோல்வியை காட்டுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலில் அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு எம்பி தொகுதியை கூட கைப்பற்றவில்லை. இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 15 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியிருந்த காங்கிரஸ் தற்போது வெளியாகியுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதேபோல் முந்தைய சட்டப்பேரவை தேர்தலில் 47 தொகுதிகளை கைப்பற்றிய பாஜ தற்போது 40 இடங்களாக குறைந்துள்ளது.