தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு அக்டோபர் 25ம் தேதி இரவு 9.40க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். தொடர்ந்து தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அக்டோபர் 26ம் தேதி இரவு 7.20க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும் எர்ணாகுளத்தில் இருந்து எம்ஜிஆர் ரயில்நிலையத்துக்கு அக்டோபர் 24 இரவு 7.40க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். எம்ஜிஆர் ரயில்நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு அக்டோபர் 25 மாலை 3.10க்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Related Stories: