இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். இடைத்தேர்தல் வெற்றியை பார்க்கும் போது 2021லிலும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து,

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தர்மம் வென்றிருக்கிறது; அதர்மம் தோற்றிருக்கிறது எனவும், அதிமுக அரசுக்கு தமிழக மக்கள் அளித்த நற்சான்றிதழே இடைத்தேர்தல் வெற்றி எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: