கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை

அண்ணாநகர்: தீபாவளி பண்டிகை 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வரும் 2,500 காய்கறி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நி.ஜி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார். ஆனால், அன்றைய தினம் பூ மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும் என மலர் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் மூக்கையா தெரிவித்தார். இதைப்போல பழ மார்க்கெட் இயங்கும் என அங்காடி விற்பனை குழு உறுப்பினர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

Related Stories: