சென்னை: இந்தியாவில் மும்பை, டெல்லி, புனே, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு மற்றும் தமிழகத்தின் கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 நகரங்களில் செயல்பட்டு வரும் ரூபீக் தங்க நகை கடன் நிறுவனம் தற்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரூபீக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுமித் மணியார் கூறுகையில், ‘‘சென்னை சந்தையில் எங்கள் நிறுவனம் காலடி எடுத்து வைப்பதில், நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நிறுவனத்தில் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான தங்க கடன்கள் வாடிக்கையாளரின் வீட்டு வாசலில், 30 நிமிடங்களில் வழங்கப்படும்.