சென்னை: 7 பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் அரசுக்கு வரவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில், அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; ஆளுநரை தமிழக அரசு வற்புறுத்த முடியாது; ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் மனு நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசுக்கு வரவில்லை.