சென்னை: அமெரிக்காவில் உள்ள மகளுக்கு, அப்பா அனுப்பிய தீபாவளி பரிசு பார்சலை கொண்டு சேர்காத கூரியர் நிறுவனத்துக்கு ₹45 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அடையாறு, காந்தி நகரை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் வெளிநாட்டில் இருக்கும் மகளுக்கு, சம்பந்தம் கடந்த 2016ம் ஆண்டு தீபாவளி பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த பார்சலில் ₹11,850 மதிப்புள்ள புடவைகள், மேலும் பல்வேறு ஆடைகள், பலகாரங்கள் இருந்தன. இந்த பார்சலை மயிலாப்பூரில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து அனுப்பியுள்ளார். ஆனால், அந்த பார்சல் அமெரிக்காவில் உள்ள மகளுக்கு செல்லவில்லை.