சென்னை: சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் கால்வாய் கட்ட முடியாது என்று சொன்ன தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள ராவணபுரம், செல்லப்பம்பாளையம் உள்பட ஆறுகிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாலாறு, நல்லாறு ஆகிய ஆறுகள் மூலம் பாசனவசதி பெற்று வந்தன.பாலாறின் குறுக்கே திருமூர்த்தி அணைகட்டப்பட்ட பின், அதற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக, 1968ம் ஆண்டு, 49 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைத்து நல்லாறு ஆற்றின் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதனால் தங்களுக்கு வரவேண்டிய தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாவதாகவும் கூறி, நல்லாறு பாலாறு பாசன படுகை விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்யும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் கால்வாய் கட்ட முடியாது என்பதா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
- கால்வாய்
- தமிழ்நாடு
- அரசு
- உயர் நீதிமன்றம்
- சூரிய
- கால்வாய் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாது: உயர் நீதிமன்றம்