வீட்டில் பதுக்கிய 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணா நகர், 18வது அவென்யூ பகுதியில், திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் உதவி ஆய்வாளர் யூவராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஏழுகிணறு பகுதியை சேர்ந்ந முகமது ரியாஸ் (19), திருநெல்வேலியை சேர்ந்த கணேசன் (28) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, சென்னையில் பல இடங்களில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், அண்ணாநகர், 21வது அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: