இயந்திர கோளாறு, பயணிகள் குறைவு,..3 உள்நாட்டு விமானங்கள் ரத்து: பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 4.50 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி செல்ல வேண்டும். இந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே முன்பதிவு  செய்திருந்தனர். அதேபோல் இந்த விமானம் திருச்சி சென்று விட்டு மீண்டும் காலை 8.50 மணிக்கு சென்னை வரவேண்டும். அந்த விமானத்திலும் மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையிலான பயணிகளே முன்பதிவு செய்திருந்தனர். இதன்  காரணமாக, சென்னையில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து சென்னைக்கும் வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து, சென்னையில் இருந்து புறப்படும் 4.50 மணி  விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் காலை 9.30 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், சென்னையில் இருந்து காலை 9 மணிக்கு மதுரை செல்லும் ஏர்  இண்டியா அலையன்ஸ் விமானம் கோளாறால் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: