ராமநாதபுரம்: ஓமன் நாட்டில் ஏற்பட்ட புழலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடல்களை மீட்டுத்தர கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 4 பேர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒப்பந்தம் அடிப்படையில் ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் உள்ள கடலில் கூலித் தொழிலாளர்களாக மீன் பிடித்து வந்தனர். கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஒரு வாரத்தில் கரை திரும்ப வேண்டிய அவர்கள் 10 நாட்களாகியும் கரை திரும்பவில்லை. இந்த மீனவர்கள் புயலில் சிக்கி மாயமாகி விட்டதாக ஓமனில் வேலை செய்து வரும் நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் சிலர் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.